ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரகைப் பிரயோகம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றவர்களின்

சங்கங்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒன்றிணைந்த தேசிய அமைப்பு ஆகியன இணைந்து  பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இன்று (18) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.

இந்நிலையில், சுமார் 2 மணித்தியாலங்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரச  சங்கங்களின்  உறுப்பினர்கள்  பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்ந்து வேலையற்ற  பட்டதாரிகள் சங்கம்  போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது   பொலிஸார்  நீர்த்தாரகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். 


இதனையடுத்து போராட்டக்காரர்கள்  வீதியின் மறுபுறம் சென்று  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். (P)


Related Posts