முட்டிக்கொண்ட நடிகையிடம் இப்போது அன்பு பாராட்டும் நயன்தாரா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை நயன்தாரா மற்றும் நஸ்ரியா ஆகியோர் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்து இருக்கின்றனர். அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வைரலாகி வருகிறது. முன்னதாக நயன்தாராவும் நஸ்ரியாவும் ராஜா, ராணி படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் இந்த படத்தில் ஒன்றாக நடிக்கும்போது, இவர்களுக்குள் சண்டை வந்ததாக கூறப்பட்டது. காரணம் நயன்தாராவிற்கு நஸ்ரியா விளையாட்டு தனமாக நடந்து கொள்வது பிடிக்கவில்லை. இதனாலே இவர்களுக்குள் முட்டி கொண்டதாக பேசப்பட்டது. இப்போது இருவரும் ஒன்றாக போட்டோ எடுத்துக்கொண்டுள்ளனர். பொதுவாகவே இரு ஹீரோயின்கள் ஒன்றாக இருந்தால் இப்படித்தான் சண்டை வரும் என்பதை கேள்விபட்டிருப்போம். அதுபோலவே நயன்தாரா திரிஷாவுடன் பல வருடம் பேசாமல் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சமந்தாவும் நயன்தாராவும் ஒன்றாக நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் எந்த வித சண்டை சச்சரவும் இல்லாமல் நடித்தார்களே? ஏன் என்றால் அந்த படத்திற்கு நயன்தாராவின் கணவர் தான் டைரக்ஷன் அப்படி இருக்க, தான் சண்டை போட்டால் தனது கணவரின் எதிர்காலம் வீணாகிவிடும் என்று கூட அமைதியாக விட்டு கொடுத்து நடித்து இருக்கலாம்.

Related Posts