நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் கிராம அதிகாரிகள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இன்றும் நாளையும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஒன்றிணைந்த கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.

 இதேவேளை, பதிவாளர் நாயகம் திணைக்கள அதிகாரிகளும் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இதன்படி நாடளாவிய ரீதியில் காணி பதிவாளர்கள் மற்றும் மேலதிக பதிவாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பதிவாளர் சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

 எவ்வாறாயினும், இந்த தருணத்தில் நாட்டுக்காக அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். (P)

Related Posts