திடீரென வடிவேலுவை பாராட்டி தள்ளும் ரசிகர்கள் ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் வடிவேலு உடன் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்த வெங்கல் ராவ் தற்போது உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கிறார். அவரது கை மற்றும் கால் செயலிழந்து சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக வெங்கல் ராவ் வீடியோ வெளியிட்டு இருந்தார். பொதுவாக நடிகர்கள் சினிமாவில் நடித்து பிரபலமாகி, பின்னர் வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பு கேட்பதும், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தால் உதவி கேட்பதும் சகஜமான செயல் தான். அதற்கு எப்போதும் போல கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் அமைதியாக இருப்பதும், சினிமாவில் இப்போது தான் உயர்ந்து வரும் நடிகர்கள் முன்னாடி வந்து உதவுவதும் பொதுவான விஷயம் தான். அதுபோல் தான் சினிமாவில் இப்போது தான் வளர்ந்து வரும் KPY பாலா 1 லட்சம் ருபாய் கொடுத்துள்ளார். இவர் அல்லாது சிம்பு இரண்டு லட்சம் ருபாய், KPY பாலா 1 லட்சம் ருபாய், ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் என உதவி செய்திருந்தனர்.

 இந்நிலையில் நடிகர் வடிவேலு ஒரு லட்சம் ரூபாயை வெங்கல் ராவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். வடிவேலு தன்னுடன் நடித்த நடிகர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய மாட்டார் என நடிகர்களே சிலர் அவர் மீது இதற்கு முன்பு குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வடிவேலு தற்போது வெங்கல் ராவுக்கு உதவி செய்திருக்கிறார். முன்னதாக தன் உடன் நடித்த அல்வா வாசு போன்ற நடிகர்கள் இறப்பிற்கு கூட போகாத வடிவேலு இப்போது இவருக்கு உதவிய தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்று வருகிறது.

அத்தியாவசிய சேவையாக ஆசிரியர் சேவை | Thedipaar News

Related Posts