சிறையில் இருந்தபடியே இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சென்னை புழல் சிறையில் இருந்தபடியே கைதி ஒருவர் தன் மனைவியை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு 1.47 கிலோ மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தியுள்ளது அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை புழல் சிறையில் இருந்தபடியே காசிலிங்கம் என்ற கைதி, தன் மனைவியை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு, சென்னையில் இருந்து இலங்கைக்கு 1.47 கிலோ மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தியுள்ளார். 

திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கும் நிலையில், சிறையிலிருந்து ஒரு கைதி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் புதிய உச்சம்.

 ஏற்கனவே திமுக அயலக அணியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் சர்வதேச போதைப்பொருள் மாபியா நடத்திவந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு போதைப்பொருள் மாபியா அம்பலப்பட்டிருப்பது, இந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தலின் முக்கிய மையமாக மாறியிருப்பதையே காட்டுகிறது என பழனிசாமி கூறினார். 

பிரபலத்துடன் நிச்சயம் | நடிகை சுனைனா | Thedipaar News

Related Posts