பெண்ணிற்கு நடந்த கோலாகல திருமணம்! புலம்பி தள்ளும் சரத்குமார்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவுக்கும் ஜூலை 10, அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சினிமா பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. வரலட்சுமி, நிக்கோலாயை காசுக்காக தான் திருமணம் செய்துகொண்டார், நிகோலய் ஆபத்தானவர் போன்ற நெகடிவ் கருத்துக்களை சிலர் கூறி வந்தனர். அதுமட்டுமின்றி நிகோலய் -வின் உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்து வந்தனர். அதுமட்டும் அல்லாது இவருக்கு வரலட்சுமி வயதில் பெண் பிள்ளை இருப்பதால் இந்த வயதில் திருமணம் தேவையா என்றும் சிலர் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சரத்குமார், தனது மகள் திருமணத்தில் எழுந்த தவறான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில், நான் சமூக வலைத்தளங்களில் கவனித்து வருகிறேன். 

உங்களுக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து பேச வேண்டும். மற்றவர்களை கன்னாபின்னாவென பேசுவதற்கு உரிமை யார் கொடுத்தது? என்னுடைய மகள் பணத்திற்காக திருமணம் செய்து இருக்கிறார்கள் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். வரலட்சுமி எதற்காக திருமணம் செய்துகொண்டார் என்பது அவருடைய முடிவு. அவர் நிக்கோலாயை மனதார பிடித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். உண்மையில் இவருக்கு திருமண வாழ்த்து கூறியவர்களை விட இவர்களது ஜோடியை பார்த்து இப்படி ஒரு ஜோடியா? இந்த பெண்ணிற்கு இதெல்லாம் தேவையா என்றே பலர் விமர்சித்து வருகிறார்கள். அந்த ஆதங்கத்திலே சரத்குமார் புலம்பி உள்ளார்.

Related Posts