நெப்போலியன் மருமகள் யார்? என்ன செய்கிறார்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக தொடர்ந்து நடித்து வந்தவர் தான் நடிகர் நெப்போலியன். படங்களில் மட்டுமல்ல அரசியலில் கூட இவர் தனி நாயகனாக ஜொலித்து வந்தவர். தன்னுடைய மகனுக்காக அமெரிக்காவிலே செட்டில் ஆகிவிட்டார். இப்போது படத்தில் இருந்தும் அரசியலில் இருந்தும் முற்றிலும் விலகிவிட்டார். இவர், ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த தனுஷ் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரது மகன் போலவே கஷ்டப்படும் குழந்தைகளுக்காக தனி மருத்துவமனையை கட்டிக்கொடுத்துள்ளார் நெப்போலியன். இந்நிலையில் மூத்த மகன் தனுஷூக்கு அக்ஷயா என்கிற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோவை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ வைரலும் ஆனது. நெப்போலியனின் வருங்கால மருமகள் அக்ஷயா திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts