காதலில் மட்டுமா பணவிஷயத்திலும் ஏமாந்த ஓவியா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை ஓவியா தமிழில் களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அதன் பிறகு மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம் போன்ற பல படங்களில் நடித்தார். என்னதான் பல படங்களில் நடித்தாலும் கூட இவருக்கு புகழை வாங்கி கொடுத்த பெருமை பிக்பாசையே சேரும். ரசிகர்கள் ஆர்மி தொடங்கும் அளவுக்கு ஆதரவு கிடைத்தது. இருப்பினும் ஆரவ் உடன் ஏற்பட்ட காதல் சர்ச்சையால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.. அந்த நேரத்தில் இவர் தேர்தலில் நின்றிருந்தால் கூட இவரை மக்கள் வெற்றிபெற வைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு மக்கள் ஆதரவுடன் திகழ்ந்தார் ஓவியா. பிக் பாஸ் முடிந்து வெளியில் வரும் போது பெரிய அளவில் படவாய்ப்புகள் அவருக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை.சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஓவியா தன்னை பலரும் காதலித்து ஏமாற்றிவிட்டார்கள் என பேசி இருக்கிறார். மேலும் பண விஷயத்திலும் சிலர் ஏமாற்றியதாக அவர் கூறி இருக்கிறார். அதனால் ஓவியாவை ஏமாற்றியது யார் என்கிற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது. எப்போதும் நேர்மையாக இருக்கும் ஓவியாவை இப்போது படங்களில் பார்ப்பது அரிதாகிவிட்டது. ஒருகாலத்தில் தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய ஓவியாவை இப்போது ரசிகர்கள் மறந்தேவிட்டார்கள்.

Related Posts