ஹமில்டனில் வாளினை கொண்டு காரை சேதப்படுத்திய நபர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஹமில்டன் பகுதியில் நபர் ஒருவர் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பிலான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். சுமார் 36 வாகனங்களை குறித்த நபர் வாள் ஒன்றின் மூலம் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியதுடன் மக்களை தம்முடன் சண்டைக்கு வருமாறு இந்த நபர் அழைத்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 33 வயதான நபர் ஒருவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு பசுக்கள் இறக்குமதி செய்யும் இந்தியா – பாகிஸ்தான் | Thedipaar News

Related Posts