ஹிருணிகா சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு மாற்றம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இளைஞன் ஒருவரை கடத்தி அடைத்து வைத்திருந்த குற்றத்திற்காக மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டதை அடுத்து தற்போது சிறையில் உள்ள ஹிருணிகா பிரேமச்சந்திர, மகளிர் சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இருப்பினும், பணித் துறையில் அவரது பணிகள் என்ன என்பது வெளியிடப்படவில்லை.

2015ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞரை டிஃபென்டர் காரில் கடத்திச் சென்று அடைத்து தாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (P)


Related Posts