அம்பானி வீட்டு கல்யாணத்தில் அத்துமீறி நுழைந்த யூடியூபர்கள்! நடந்தது என்ன?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உலக பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா திருமணம் கோலாகலமாக கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரபலங்கள், இந்திய அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலர் பங்கேற்றனர். இதில் பிரபலங்கள் பங்கேற்ற நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக இருந்தது. இந்நிலையில் திருமண விழாவில் திடீரென இருவர் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்களை பிடித்த பாதுகாவலர்கள் விசாரித்தபோது ஆந்திராவை சேர்ந்த யூடியூபர் வெங்கடேஷ் நரசைய்யா அல்லூரி (26), முகமது ரஃபி ஷேக் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் சந்தேகத்திற்கு இடமாக இருந்த இருவரையும் பிடித்து வெளியே அனுப்பியுள்ளனர். ஆனால் மறுபடியும் அவர்கள் மண்டபத்திற்குள் நுழைந்ததால் சந்தேகம் அடைந்த பாதுகாவலர்கள் 2 பேரையும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Related Posts