சிவகார்த்திகேயனது 3-வது மகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவின் இளம் நடிகராக, நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். இவரது படம் என்றாலே கலகலப்பாக, குடும்பங்களுடன் இணைந்து பார்க்கும்படி இருக்கும். தனது படங்களில் எந்த மாதிரி காட்சிகள் வர வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். குறிப்பாக படுக்கை அறை காட்சிகள் வரக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். கடைசியாக இவரது நடிப்பில் அயலான் படம் வெளியாகி இருந்தது, அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படம் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிவகார்த்திகேயன் தனக்கு 3வது மகன் பிறந்திருக்கிறார் என சந்தோஷ செய்தி வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தார்கள்.

 தற்போது தனது 3வது மகனுக்கு பவன் சிவகார்த்திகேயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அழகான வீடியோவுடன் அறிவித்துள்ளார். இப்போது இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. என்னதான் தன்னை சுற்றி தவறான விமர்சனங்கள் எழுந்தாலும் எது பற்றியும் கவலை கொள்ளாமல் தன் சொந்த வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் பிசியாக உள்ளார்.


Related Posts