கொந்தளித்து பேசிய ஐஸ்வர்யா ராய்! என்ன மனுஷங்க? அருவெறுப்பாக உள்ளது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த திருமணத்தில் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் தனித்தனியாக கலந்து கொண்டனர்.ஆனால் முன்னாள் காதலர்களான சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் ஒன்றாக திருமண விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்று சித்தரித்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். மேலும் சல்மான்கானுடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா போன்ற செய்திகளும் வெளிவந்தது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய நடிகை ஐஸ்வர்யா ராய், எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. திருமணமான ஒரு பெண்ணை அதுவும் ஒரு பெண்ணுக்கு தாயான ஒரு பெண்ணை குறித்து இப்படியா பேசுவது? புரளியை கிளப்பும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கே அருவெறுப்பாக உள்ளது என்று ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். 

முன்னதாக இவர் குறித்து இவருக்கும் அபிஷேக் பட்சனுக்கும் விவாகரத்து என்றவாறு எல்லாம் செய்திகள் கிளம்பின. இது எல்லாவற்றாலும் கடுப்பான ஐஸ்வர்யா ராய் இன்று கொந்தளித்து பேசியுள்ளார். ஒரு நடிகை எல்லா வதந்திகளுக்கும் சும்மா இருக்கிறார் என தொடர்ச்சியாக அவரை வைத்தே தவறான செய்தியை கிளப்புவது எந்த விதத்தில் நியாயம் என நெட்டிசன்கள் ஐஸ்வர்யா ராய்க்கு சாதகமாக பதிவிட்டு வருகிறார்கள்.

Related Posts