துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் உயிரிழப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அம்பலங்கொடை பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்றிரவு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் 41 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த நபரின் தலையில் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் 19 வயதிற்குட்பட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் வீரரான தம்மிக்க நிரோசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிதாரிகள் வருகைத் தந்த விதம் தொடர்பான தகவல்கள் இதுவரை தெரிய வரவில்லை,

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைபொலிஸார் ஆரம்பித்துள்ளனர். (P)

அம்பானி வீட்டு விசேஷத்தில் நடிகை, நடிகர்கள் | Thedipaar News

Related Posts