குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் அரசு பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. இதனை தொடர்ந்து குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் பல்வேறு துறைகளில் 2327 காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை கடந்த ஜூன் 20ம் தேதி டி என் பி எஸ் சி வெளியிட்டது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 19 நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பித்த பிறகு அது சரியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை நிரந்தர பதிவுக்கு சென்று உறுதி செய்யலாம்.

Related Posts