கடுப்பாகி மேடையில் காட்டம் காட்டிய ராதிகா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை ராதகா, தமிழ் சினிமாவில் வெள்ளித்திரை, சின்னத்திரை என ஒரு கலக்கு கலக்கியவர். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் நடித்துள்ள இவர் தயாரிப்பாளராகவும் சாதித்து வருகிறார். அண்மையில் இவர்களது வீட்டில் திருமண விசேஷம் நடந்தது, அதாவது நடிகை வரலட்சுமி-நிக்கோல் திருமணம் கொண்டாட்டம் நடந்தது. இவர்களது திருமணம் பற்றிய டாக் தான் இணையம் முழுக்க. இந்த ஜோடியை விமர்சிக்காதவர்களே இருக்க முடியாது. ஏனெனில் இவர்களது வயது வித்தியாசம் அப்படி! வரலட்சுமி வயதில் இந்த மாப்பிள்ளைக்கு மகளே இருப்பதால் தான் இந்த திருமணம் பெரும் பேசு பொருளாக மாறியது. 

 இந்த நிலையில் இந்த விமர்சனம் குறித்து ராதிகாவும், சரத்குமாரும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். ஒரு விருது விழா மேடையில் நடிகை ராதிகா கடும் கோபமாக பேசியுள்ளார். அதில் அவர், பிரபலம் என்பதால் ஒரு சிலர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசுகிறார்கள்.நாங்கள் நடித்த படம் பிடிக்கவில்லையா அதை பற்றி பேசுங்கள். காரணம் நீங்கள் பணம் செலவழித்து எங்களுடைய படத்தை பார்க்கிறீர்கள், நாங்கள் பிரபலமாக இருந்தாலும் எங்களுக்கு மனசு இருக்கு ஆனாலும் இந்த மாதிரி முகத்தையே காட்டாமல் கண்ட மேணிக்கு பேசுபவர்களை பற்றி எங்களுடைய மனதில் நாங்கள் ஏற்றிக் கொள்வது கிடையாது. வாய்க்கு வந்ததை பேசுபவர்கள் போல நாங்கள் சும்மா இல்லை, எங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது என காட்டமாக பேசியுள்ளார்.

Related Posts