இந்த நடிகையை நினைவு இருக்கிறதா? மூன்று வருடம் சீரியலுக்கு குட்பாய் சொன்ன நடிகை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மலையாளத்தில் சீரியல் மூலம் முதன்முறையாக நடிக்க தொடங்கியவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இவருக்கு மலையாள சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு, அங்கு மட்டுமா? தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு என்று தனி இடம் உண்டு.முதல் தொடரிலேயே வில்லியாக நடிக்க தொடங்கியவர் பின் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தார். தமிழில் பாரிஜாதம் என்ற தொடர் மூலம் அறிமுகமானவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் தான் பெரிய ரீச் கொடுத்தது. இந்த சீரியலில் அண்ணியாரே என இவர் கொழுந்தன் அழைப்பது போன்று வேடம் இருக்கும். அதுவே இவருக்குபெரிய பெயரை கொடுத்தது. இப்போதும் இவரை இவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அண்ணியாரே என்று தான் அழைக்கிறார்கள். அந்த சீரியலில் ஹீரோயின் கதாபாத்திரத்தை தாண்டி இவரது கதாபாத்திரமே அதிகம் பேசப்பட்டது. தெய்வமகள் சீரியலுக்கு பின்னர் நந்தினி, தமிழும் சரஸ்வதியும், ஜீ தமிழ் சீரியல்கள் என தொடர்ந்து நடித்தார். 

தனது கணவருடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.தனது சினிமா பயணம் குறித்து சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், சீரியலில் நடித்துக்கொண்டிருந்த போது நிறைய பட வாய்ப்புகள் வந்தது, ஆனால் அப்போது சீரியல் போதும் என இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் சீரியலில் வரும் கதாபாத்திரம் எல்லாமே ஒரே மாதிரி இருப்பது போல் தோன்றியது அதனால் எனக்கு இருக்க சீரியலில் பிரேக் எடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் ஒரு 3 வருடம் சீரியலை விட்டு விலகி சினிமாவில் நடிக்க தொடங்கினேன்.அந்த நேரத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தேன். அதற்கு பிறகு இப்போது மீண்டும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

Related Posts