பாரிய கொள்ளைகளுடன் தொடர்புடைய 18 பேர் சிக்கினர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பீல் பிராந்திய போலீசார் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 18 பேரை கைது செய்துள்ளனர். 

வீடுகளை உடைத்து கொள்ளையிடல், வாகனங்களை கொள்ளையிடல் இடம் உள்ளிட்ட பல்வேறு கொள்ளைச் சம்பவங்களை இந்த கும்பல் அரங்கேற்றி உள்ளது. 

பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக 150 குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 18 பேரில் 2 பேர் பதின்ம வயதுடைய சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் சந்தேக நபர்கள் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களிடமிருந்து 12 வாகனங்களும் 55000 டாலர் பெறுமதியான ஆடம்பர பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

எலான் மஸ்க் இலங்கை விஜயம் | Elon Musk | Thedipaar News

Related Posts