ஒரே கல்லில் கோடீஸ்வரராக உயர்ந்த ஏழை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மத்திய பிரதேச மாநிலத்தில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். மிகவும் கஷ்டப்படும் நடுத்தர மனிதர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஊரின் அருகில் ஏலத்திற்கு வந்த கல்குவாரி ஒன்றை அவர் வாங்கினார். அந்த கல்குவாரியில் ஒரு நாள் ராஜு வேலை செய்து கொண்டிருக்கும் போது அதில் உயர்ந்த வைரக்கல் ஒன்று கிடைத்தது. இதனை கண்ட ராஜு அந்த வைரக்கல்லை அரசு அதிகாரியிடம் ஒப்படைத்தார். அதனை சோதனை செய்த அதிகாரிகள் 19.22 கேரட் எடை இருப்பதாக கூறினார்கள். அதோடு அதன் மதிப்பு 80 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்றும் கூறினார்கள். இந்த பணத்தை ராஜூவிடம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜு மனைவி, குழந்தைகளுடன் மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வருகிறேன் என்றும் எனக்கு கிடைத்துள்ள வைரக்கல் மூலம் வரும் பணத்தை வைத்து எனது குழந்தைகளை நன்றாக படிக்க வைப்பேன் என்றும் கூறினார்.

இந்தச் செய்தி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை | Thedipaar News

Related Posts