அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்களுக்கு காசு கொடுக்கப்பட்டதா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சமீபத்தில் நடந்து முடிந்த அம்பானி வீட்டு கல்யாணத்தை பற்றி பேசாத வாய்களே இருக்க முடியாது. உலகமே வியந்த கல்யாணம் என்றால் அது ஆனந்த் அம்பானி திருமணமாக தான் இருக்கமுடியும். இந்த திருமணத்திற்காக ரூ. 5000 கோடி செலவு செய்துள்ளார்களாம். ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் வழங்கப்பட்டது.இந்த நிலையில் இந்த திருமணம் குறித்து மறைமுகமாக பிரபலம் ஒருவர் பேசிய கருத்து வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுன் கூறிய விஷயம் ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது. 

திருமணங்களில் கலந்துகொள்ள சினிமா நட்சத்திரங்கள் காசு வாங்குகிறார்கள் என அவர் கூறியுள்ளது தான் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்கள் காசு வாங்கி கொண்டு தான் வந்தார்கள் என ஒரு பக்கம் பேசப்பட்டது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இந்த சூழலில் நாகார்ஜூனா பேசிய விஷயம் தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பழைய பேட்டி ஒன்றில் நடிகர் நாகார்ஜூனா பேசியிருந்தாலும், இதனை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிஸில் சாலையோரம் வசித்த மக்கள் | Thedipaar News

Related Posts