ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான தீர்மானத்தை இன்று இடம்பெறவுள்ள அரசியல் குழுக் கூட்டத்தின்போது, தீர்மானிக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.


இருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு மூடிய அறைச் சந்திப்பாக அமைந்திருந்தாகக் கூறப்படுகிறது.


இதற்கு முன்னரும் இவ்வாறான பல சந்திப்புகள் இடம்பெற்ற நிலையில் அவை இணக்கப்பாடின்றி நிறைவடைந்திருந்தன.


அதேநேரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராகத் தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், தமது கட்சியின் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இன்று வெளியிடவுள்ளது. (P)

Related Posts