2024 ஜனாதிபதி தேர்தல்: விசேட கலந்துரையாடலுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மாகாணங்களின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இன்று (02) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அத்துடன், தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி தேர்தல் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றும் இதில் இணைந்து கொள்ளவுள்ளது.

11 மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கும் இன்று (02) அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நிர்வாக விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நேற்று (01) நியமிக்கப்பட்டுள்ளார். (P)


Related Posts