சுமந்திரனை சந்தித்தார் ரணில்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (01) இடம்பெற்றுள்ளது.

“அதிகாரப் பகிர்வு தொடர்பான தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் ஒருகட்டமான இந்த சந்திப்பு அமைந்திருந்ததாக எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை இம்மாதம் இறுதி வாரத்தில் பாராளுமன்றில் நிறைவேற்ற ஒத்துழைப்பதாக ஜனாதிபதி இதன் போது உறுதியளித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் நிறைவடைந்த உடனேயே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.

மேலும், நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ஜனாதிபதி ரணிலுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், சுமந்திரனையும் ரணில் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (P)


Related Posts