வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பலரை மீட்டவர் மாயம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சூரல்மலை கிராமத்தைச் சேர்ந்த லாட் பிரஜீஷ் என்பவரும் நிலச்சரிவில் சிக்கிய பலரின் விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றி உள்ளார். ஆனால் அவர் இப்போது காணாமல் போய் உள்ளார். நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பே சூரல்மலை பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ள பிரஜீஷை சூப்பர்ஹீரோ என அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

இதுகுறித்து சூரல்மலை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “முண்டக்கை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக முதலில் தகவல் கிடைத்ததும் பிரஜீஷ் தனதுஜீப்பில் மலைப்பகுதிக்கு 2 முறைசென்று அங்கு சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டு வந்தார்.அதன் பிறகு தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

அப்போது ஒரு செல்போன் அழைப்பு வந்தது. இதையடுத்து, 3-வது முறையாக ஜீப்பில் மலைப் பகுதிக்குச் சென்றார். அதன் பிறகுஅவர் திரும்பி வரவே இல்லை. பின்னர் அவருடைய ஜீப் சேதமடைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. ஆனால் பிரஜீஷ் என்ன ஆனார் என இதுவரை தெரியவில்லை” என்றார். மற்றொரு கிராமவாசி கூறும்போது, “எங்கள் ஊரில் நடக்கும் அனைவருடைய குடும்ப நிகழ்ச்சியிலும் பிரஜீஷ் கலந்து கொள்வார். 

திருமணமாக இருந்தாலும் ஒருவரின் மரணமாக இருந்தாலும் அந்தநிகழ்ச்சியின் தொடக்கம் முதல் இறுதி வரையில் உடன் இருந்து தேவையான உதவிகளை செய்வார். என் மகளின் திருமணத்துக்கும் உதவினார். அவரை இழந்துவிட்டோம்” என்றார்.

Related Posts