லெபனானில் இஸ்ரேல் போர் விமானங்கள்: மக்கள் அலறியடித்து ஓட்டம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

லெபனான் நாட்டின் பெய்ரூட் நகர் மீது இஸ்ரேலின் போர் விமானங்கள் இன்று விண்ணை கிழித்து கொண்டு சென்றன. இதனால் எழுந்த சத்தம் அதிக அளவில் இருந்துள்ளது. ஒன்றல்ல... 3 முறை இதுபோன்ற சத்தம் கேட்டுள்ளது.

அப்போது, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஜ்புல்லா தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லாவின் பேச்சை கேட்பதற்காக கூடியிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்களில் சிலர் கூறும்போது, எங்களால் அந்த விமானங்களை நேரடியாக பார்க்க முடிந்தது என கூறினர்.

பெய்ரூட்டில் பல ஆண்டுகளில், இதுவரை இல்லாத வகையில் அதிக சத்தம் இப்போது கேட்டது என அவர்கள் கூறினர். இதேபோன்று, பெய்ரூட்டின் பதரோ மாவட்டத்தில் உணவு விடுதி ஒன்றில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இதனால், அந்த பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

Related Posts