ரொறன்ரோவில் கொல்லப்பட்ட இளைஞர் யார்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவின் வுட்பின் கடற்கரை பகுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். அவர் கியூபக் மாகாணத்தை சேர்ந்த டாசியா மொபொன்கோ என தெரியவந்துள்ளது. 

குறித்த நபர் 21 வயதானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரொறன்ரோ பகுதியில் இந்த ஆண்டில் இதுவரையில் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு அல்லது மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Related Posts