அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் 3,800 விளக்குகள் திருட்டு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உத்தர பிரதேச மாநிலம்அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோயிலை சென்றடைவதற்காக பக்திப் பாதை, ராமர் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏராளமான மூங்கில் விளக்குகளால் இந்தப் பாதைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அங்கிருந்த 3,800 மின் விளக்குகள், 36 கோபோ புரஜெக்டர் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டு இருப்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து அயோத்தி போலீஸில் சேகர் சர்மா கடந்த 9-ம் தேதி புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Posts