பேருந்து மீது உயரழுத்த மின்கம்பி உரசியதால் நடந்த சோகம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூட்டடா கிராமத்துக்கு நாள்தோறும் கோத்தகிரி பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இன்று வழக்கம்போல் பேருந்தை ஓட்டுநர் பிரதாப் இயக்கி வந்துள்ளார். அப்போது கெங்கரை அடுத்துள்ள கோவில்மட்டம் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்த போது, அதிக மேகமூட்டம் காரணமாக உயரழுத்த மின்சார கம்பி தாழ்வாக இருந்தது ஓட்டுநருக்கு தெரியாமல் போயிருக்கிறது. இதில் மின்சார கம்பி பேருந்து மீது உரசி பேருந்தின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

உடனே சுதாரித்த ஓட்டுநர் பேருந்தை சாலையிலேயே நிறுத்தி பேருந்துக்குள் இருந்த பயணிகளை இறக்கிவிட்டுள்ளார். கடைசியாக அவர் இறங்கும் போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Related Posts