மோடிக்கு பறந்த மருத்துவர்களின் கடிதம்! இன்னும் இது பற்றி வாய் திறக்காமல் உள்ளாரே?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பா*லியல் வன்கொ*டுமையால் கொ*லை செய்யப்பட்டு ச*டலமாக கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பரவிய நிலையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், போ*ராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போ*ராட்டத்தில் பல மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெண் மருத்துவருக்கு நடந்த இந்த கொ*டூரமான சம்பவத்தை குறித்து பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், இந்த வழக்கில் நேரடி சிறப்பு கவனம் செலுத்தி முக்கிய குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு கடுமையான த*ண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதோடு மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பும், மருத்துவமனைகள் தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் தனி சட்டம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறி அக்கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.

Related Posts