நீதி வேண்டி கோர்ட் வாசல் ஏறிய தமன்னா எதற்காக?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிறகு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர் நடிகை தமன்னா. பொதுவெளியில் எத்தனை ரசிகர்கள் வந்து செல்பி எடுக்க வந்தாலும் முகம் சுளிக்காமல் அன்போடு புகைப்படம் எடுத்துக்கொள்ளும் தமன்னாவின் புகழ் தான் பாலிவுட் முழுக்க! ரஜினி படத்தில் காவாலா பாடலுக்கு நடனமாடி மேலும் புகழை உயர்த்தி கொண்டார். ரஜினிக்காக ஜெயிலர் படத்தை பார்க்க சென்றவர்களை காட்டிலும் தமன்னாவிற்க்காக படத்தை பார்க்க சென்றவர்களே அதிகம். இன்ஸ்டாகிராமில் பலரும் இந்த பாடலை ரிகிரியேட் செய்தாலும் யாராலும் தமன்னா போல ஆடமுடியவில்லை. இப்போது இதுபோலவே பாலிவுட்டில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார் அந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் வைரல். இப்போது பிரபல கதாநாயகியாக இருப்பதால் இவர் விளம்பர நிறுவனங்களுக்கு மாடலாக நடித்திருந்தார். இதனால் சோப்பு மற்றும் நகைகள் வாங்கி விற்கும் விளம்பர நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்த தமன்னா தற்போது, உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடங்கியுள்ளார்.

 அதில், நான் ஒப்பந்தம் செய்யப்பட்ட காலம் முடிந்த நிலையிலும் இந்த நிறுவனங்கள் நான் நடித்த விளம்பரங்களை பயன்படுத்துவதாக கூறினார். அதை தொடர்ந்து, இந்த வழக்கை விசாரணை செய்த போது, கோல்டு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் ஆஜரானார், அங்கு அவர் தமன்னாவின் விளம்பரத்தை எங்கள் நிறுவனம் நிறுத்தி விட்டதாக தெரிவித்திருந்தார். மேலும், எங்கள் பழைய விளம்பரங்களை தனி நபர்கள் பயன்படுத்துவதால் எங்கள் நிறுவனம் அதற்கு பொறுப்பு ஏற்க முடியாது என்று வாதிட்டார். இதை தொடர்ந்து இந்த விசாரணையை செப்டம்பர் மாதத்திற்க்கு தள்ளி வைத்துள்ளனர்.

Related Posts