என்னது நாட்டாமை படத்தில் ரஜினி உள்ளாரா? இந்த காட்சியை பார்த்தீர்களா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கே.எஸ்.ரவிக்குமார் அவரது சினிமா பயணத்தில் நிறைய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார், அதில் ஒன்று தான் நாட்டாமை. எப்போது படத்தை பார்த்தாலும் சலிக்காத கதைக்களம் என்பதனால் எக்காலத்து மக்களுக்கும் இந்த படம் பிடித்தமானதாக இருக்கும். சரத்குமார் ஹீரோவான நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. சரத்குமாருக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகியோர் நடித்திருந்தனர். படம் ரிலீஸ் ஆகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய இப்படம் படு பிளாக்பஸ்டர் ஹிட் படமானது, சரத்குமாரின் மார்க்கெட்டும் உயர்ந்தது.முதலில் கதையை மம்முட்டியிடம் கூற அவர் வேறொரு படத்தில் பிஸியாக இருக்க பார்த்திபனிடம் கதை சென்றுள்ளது, அவரும் அதே காரணத்தை கூறியுள்ளார். பின்பு கடைசியாக தான் சரத்குமாரிடம் நாட்டாமை கதை சென்றுள்ளது. 

ஒருவர் மாறி ஒருவராக சென்ற கதை இறுதியாக தான் சரத்குமாரிடம் சென்றது. அவரும் நடித்து இந்தப்படத்தையும் வெற்றி காணவைத்து விட்டார். தானும் சினிமாவில் வெற்றி பெற்றுவிட்டார். சரத்குமாரை தவிர வேறு யாரும் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் படம் இந்த அளவுக்கு ஹிட் ஆகி இருக்குமா என தெரியவில்லை. அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிவிட்டார் சரத்குமார். அதாவது தமிழில் இப்படம் செம ஹிட்டடிக்க தெலுங்கில் மோகன்பாபு நடிக்க உருவாகியுள்ளது. சரத்குமார் கதாபாத்திரத்தில் மோகன்பாபு நடிக்க, அவரின் தந்தையாக அதாவது விஜயகுமார் நடித்த கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். பெத்தராயுடு என்ற பெயரில் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

Related Posts