தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம்! சிக்கும் இயக்குனர் மனைவி தலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ஆம் தேதி கொடூரமாக வெ*ட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. காரணம் தேசிய கட்சி தலைவர், குத்துசண்டை வீரர் என மனதாலும் உடலாலும் பலம் வாய்ந்தவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை? இந்த கொ*லை வழக்கில் சம்பந்தட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் தலைமறைவாகிய ரவுடி சம்போ செந்தில் உள்ளிட்டவர்களை போலிசார் தேடி வருகிறார்கள்.ரவுடி சம்போவின் நண்பரான மொட்டை கிருஷ்ணனுக்கு இயக்குனரின் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்ததாகவும், அவருடைய வங்கி கணக்குக்கு ரூ. 75 லட்சம் பண பரிவத்தனை செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்தது. இதற்கு மோனிஷா தரப்பில் இருந்து இது முற்றிலும் பொய்யான தகவல் என விளக்கம் அளித்து இருந்தார்.

 நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள் அதுபோல ஒன்றுமே நடக்காமல் எந்த தொடர்பும் இல்லாமல் இது போன்ற வதந்திகள் கூட வராது. அப்படி இருக்க இயக்குனர் மனைவிக்கும் இந்த சம்பவத்துக்கும் என்ன தொடர்பு என விசாரித்து வருகிறார்கள். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குனர் நெல்சனிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி நிலையில், ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக என்னிடமும் என் மனைவியிடமும் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை. மேலும் காவல்துறை சார்பில் சம்மன் ஏதும் எனக்கு அனுப்பப்படவில்லை என்று நெல்சன் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகருக்கு என்னாச்சு | Thedipaar News

Related Posts