டயனாவுக்கு பிணை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ​(27)உத்தரவிட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை வைத்திருத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக முறையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாததைத் தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, 25,000 ரூபா மற்றும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிணை நிபந்தனைகளை விதித்தார்.

நீதிமன்ற உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது சட்டத்தரணியுடன் செவ்வாய்க்கிழமை ​(27) நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (P)


Related Posts