ஓவராக சொற்பொழிவு ஆற்றி போலீசில் மாட்டிக்கொண்ட ஆன்மீக பேச்சாளர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகா விஷ்ணு என்பவரால் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது புகார்கள் குவிந்து வருகிறது. பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியவர் முன் ஜென்மம் மற்றும் தற்போது உள்ள பாவம் புண்ணியங்களை வைத்து தான் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என்று கூறினார். இதனால்தான் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் அவர் மீது புகார் கொடுத்தனர். இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் மற்றொரு சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக மகாவிஷ்ணு கிளம்பி சென்று விட்ட நிலையில் இன்று அவர் சென்னைக்கு வந்தார். சென்னை சைதாப்பேட்டை காவல்துறையினர் ஏர்போர்ட்டில் வைத்து விசாரணை நடத்தினார். மேலும் இதைத் தொடர்ந்து மகாவிஷ்ணுவை கைது செய்து காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்ற நிலையில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

75 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா | Thedipaar News

Related Posts