மகள் தலையில் சிசிடிவி கேமரா: 24மணிநேரமும் கண்காணிக்கும் தந்தை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த தந்தை ஒருவர், தனது மகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் தனது மகளின் தலையில் சிசிடிவி கேமராவைப் பொருத்தியுள்ளார். அந்தப் பெண்ணும், தான் எங்குச் சென்றாலும் தலையில் சிசிடிவி கேமராவுடனேயே சென்று வருகிறார். இவ்வாறு அந்தப் பெண் தலையில் சிசிடிவியுடன் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அந்தப் பெண், “நான் எங்கெல்லாம் சென்றுவருகிறேன், என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்வதற்காக எனது அப்பா என்னுடைய தலையில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். எனது தந்தைதான் என்னுடைய பாதுகாவலர். சிசிடிவி பொருத்தியிருப்பது எனக்கு பாதுகாப்பாகத்தான் உள்ளது.

கராச்சியில் பாலியல் வன்கொடுமைகள், தாக்குதல்கள், கொலைச் சம்பவங்கள் போன்றவை அரங்கேறி வருகின்றன. இதனால், எனது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் என் தந்தை சிசிடிவி கேமராவை என் தலையில் பொருத்தியிருக்கிறார். இதனைப் பொருத்துவதற்கு நான் என் தந்தையிடம் எந்தவொரு மறுப்பையும் தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.


Related Posts