நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ள தாகவும் இதில் இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

நிலவில் அணு மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இது 2036-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யாவின் விண்வெளி முகமையான ரோஸ்காஸ்மோஸ் கடந்த மே மாதம் அறிவித்தது. ரஷ்யாவும் சீனாவும் கூட்டாக உருவாக்கி வரும் சர்வதேச நிலா ஆராய்ச்சி நிலையத்துக்கு (ஐஎல்ஆர்எஸ்) தேவையான மின்சாரத்தை இந்த அணு மின் நிலையம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவில் அணு மின் நிலையம் அமைப்பது ஒரு சிக்கலான முயற்சியாக இருக்கும். எனினும், மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்தாமல் தானியங்கி முறையில் இந்த நிலையம் கட்டமைக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கான தொழில்நுட்ப தீர்வுகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகக் கூறப்படுகிறது. நிலவில் ஆராய்ச்சி மையம் அமைக்க மின்சாரம் மிகவும் அவசியமாகிறது. 

அங்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்றாலும், அங்கு 14 நாட்களுக்கு சூரிய ஒளி கிடைக்காது. எனவேதான் அணு மின் நிலையம் அமைக்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. நிலவில் அணு மின் நிலையம் அமைப்பது குறித்து அமெரிக்காவின் நாசாவும் இதுகுறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

1 பில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ரொனால்டோ | Thedipaar News

Related Posts