இடிந்து விழுந்த சிறைச்சாலை சுவர்; தப்பி ஓடிய கைதிகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நைஜீரியாவில் தொடர் கனமழையால் மைடுகுரி நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

சுவர் இடிந்ததையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 281 கைதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தலைமறைவான கைதிகளை தேடும் பணிகளை காவல்துறையினர் முடுக்கிவிட்டனர்.

இதையடுத்து, 7 கைதிகள் மட்டும் பிடிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts