சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர் விபரீத முடிவு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

விவேகானந்தன் மற்றும் கருணாஸ் என இருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், 57 வயதான விவேகானந்தன் சிறை கழிப்பறையில் தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இவரும் மற்றொரு குற்றவாளியான கருணாசும் ஏற்கனவே சிறையில் பல முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டவர்கள் என்பதும் எனவே இவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று அவர் தற்கொலை செய்து இறந்து கிடந்ததை கண்ட சிறை அதிகாரிகள் அவரது உடலை மீட்டு காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கும் ஆதரவாக வாதாட மாட்டோம் என புதுச்சேரி வழக்கறிஞர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

Related Posts