இலங்கை நீதிமன்றம் முன் தமிழக மீனவர்கள் தர்ணா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் இருந்து 2 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 22 பேரை இலங்கைக் கடற்படையினர், இலங்கை எல்லைக்குள் நுழைந்தாக கூறி கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கைது செய்தனர்.

எல்லை தாண்டி மீன் படித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் நீதிமன்றம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களை காவல்துறையினர் சமானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.தற்போது சிறையில் உள்ள 22 மீனவர்களையும் விரைந்து மீட்குமாறு தருவைகுளம் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் 16 நாட்களே ஆன குழந்தை உயிரிழப்பு | Thedipaar News

Related Posts