பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே ஆசிரியருக்கு நடந்த சோகம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (57). இவர், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், செல்லத்துரை நேற்று மதியம் பள்ளி வகுப்பறையில் மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்த அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆசிரியரின் மகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது | Thedipaar News

Related Posts