யானை கொன்று உணவாக வழங்கப்படும் அவலநிலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வரலாறு காணாத வறட்சியால் நமீபியாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடும் வறட்சியினால் மழையின்றி பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு 68 லட்சம் மக்கள் நேரடியாக வறட்சியின் பிடியில் சிக்கினர். இதன் விளைவாக கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், நமீபியாவில் 83 யானைகள் உட்பட 160 வனவிலங்குகளை கொன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. நமீபியா எடுத்த முடிவை ஜிம்பாப்வேயும் பின்பற்ற முடிவு செய்துள்ளது.

 அங்கு நாற்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 50 யானைகள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது 200 காட்டு யானைகளை கொன்று இறைச்சியை மக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முதலாக யானைகள் கொல்லப்படவுள்ளன. கடும் வறட்சியான சூழலில் உணவுக்காக மனித-விலங்கு மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வனவிலங்குகளை கொன்று உணவளிக்க அரசே களத்தில் இறங்கியுள்ளது.

பாடகிக்கு அரிதான பரிசு கொடுத்த வைரமுத்து | Thedipaar News

Related Posts