சூடுபிடிக்கும் பிரியங்கா - மணிமேகலை விவகாரம்! முற்றும் சண்டை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மணிமேகலை குக் வித் கோமாளி ஷோவில் இருந்து விலகுவதாக அறிவித்து, அதற்கு காரணம் பிரியங்கா தன்னை வேலை செய்ய விடாமல் குறுக்கிட்டு கொண்டே இருக்கிறார் என கூறி இருந்தார்.அவர் வெளியேறியது தைரியமான முடிவு என மணிமேகலைக்கு ஆதரவாக பல பிரபலங்கள் பேசி வருகின்றனர். அனிதா சம்பத் தொடங்கி தர்ஷா குப்தா, பிக் பாஸ் ஷிவின், ஐஸ்வர்யா தத்தா வரை பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக பேசி இருக்கின்றனர்.இந்நிலையில் பிக் பாஸ் ஷோவில் இருந்து பிரியங்காவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நடிகை பாவனி ரெட்டி தற்போது இந்த சர்ச்சையில் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். மணிமேகலைக்கு தான் insecurity, தன் வேலை போய்விடுமோ என்ற பயம், பிரியங்கா ஒன்றும் dominant ஆக இல்லை.

உண்மை வெல்லும் என பாவனி ரெட்டி பதிவிட்டு இருக்கிறார்.பிக் பாஸ் ஷோவில் சந்தித்துக்கொண்ட பாவனி மற்றும் அமீர் இருவரும் தற்போது காதலர்களாக வலம் வர பிரியங்கா தான் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நன்றிக்காக தான் என்னமோ பிரியங்காவிற்கு ஜால்ரா தட்டுகிறார் என்கிறது ஒரு கூட்டம். சமீபித்தில் சுனிதா கூட பிரியங்காவிற்கு ஆதரவாக பேசி இருந்தார். அதை பார்க்கும்போது கண்டிப்பாக பிரியங்காவிற்கு ஜால்ரா தட்டவில்லை என்றால் தங்களது இடம் பறிபோகிவிடும் என்ற பயத்தாலே இப்படி பேசுகிறார் என்பது போலவே இருந்தது. ஏனெனில் ஏற்கனவே விஜய் டிவியில் பிரியங்காவிற்கு இருக்கும் செல்வாக்கு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். 

ஒளிபரப்பாகும் எல்லா ஷோவையும் இவரே தொகுத்து வழங்குகிறார். இப்போது அவர் காட்டில் மழைதான் அப்படி இருக்க விஜய் டிவியே அழுத்தம் கொடுத்து மற்ற போட்டியாளர்களை மணிமேகலைக்கு எதிராக பேசும்படி தூண்டிவிட்டிருக்கலாம். அதனாலே பல குக் வித் கோமாளி போட்டியாளர்கள் சோசியல் மீடியாவில் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஆனால் பிரியங்காவை விட திறமையான தொகுப்பாளினி விஜய்டிவிக்கு கிடைக்கும் பட்சத்தில் விஜய் டிவி சற்றும் யோசிக்காமல் பிரியங்காவை கழட்டி விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Related Posts