விடுதியில் மாணவியை ஏமாற்றிய நபர்! போலீசாரின் துரித செயல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பெரம்பூரில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கல்லூரி மாணவியை ஏமாற்றி ரூ.1.40 லட்சம் பறித்த 20 வயது வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் பேரில், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பேஸ்புக் மூலம் கல்லூரி மாணவியுடன் பழகி, பின்னர் காதலாக மாறி, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனால், மாணவியிடம் இருந்து பணம் பெற்றதோடு, அவளை தனியார் விடுதிகளில் தங்கி ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் மனவருத்தம் அடைந்த மாணவி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தீவிர தேடுதலின் பின்னர், தனிப்படை போலீசார் வாலிபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Related Posts