நடிகர் அரவிந்த் சாமியின் மகனா இவர்? உச்சத்திற்கு செல்லும் போதே சினிமாவை ஒதுக்கியது ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

80, 90களில் பல இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகராக வலம் வந்தவர் அரவிந்த் சாமி. தான் வளர்ந்து வரும் நேரத்திலே சினிமாவை விட்டு விலகிவிட்டார். ஒருவேளை சினிமாவிலே இருந்திருந்தால் இன்று விஜய், அஜித் அளவிற்கு வந்திருப்பார். தலைக்கணம் இல்லாத எதார்த்தமான நடிகர். இப்படி ஒரு நடிகர் சினிமாவை ஒதுக்கிவிட்டார் என்பது பல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் தான். ஓவர் ஆக்டிங் இல்லாத எதார்த்தமான நடிப்பு மக்களுக்கு பிடித்து போகவே ரோஜா, பம்பாய், மின்சார கண்ணா போன்ற பல படங்களில் நடித்தார்.

 நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு ஒரு வி*பத்து ஏற்பட அதனால் உடல் எடை கூடி, தலைமுடி எல்லாம் கொட்டி மொத்தமாக மாறினார்.இப்போது மீண்டும் பழைய நிலைக்கு வந்து செம ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இன்று அரவிந்த் சாமி கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ள மெய்யழகன் படம் வெளியாகியுள்ளது. அரவிந்த் சாமியை நாம் சினிமாவில் அதிகம் கொண்டாடுகிரோம், ஆனால் அவரது குடும்பம் பற்றி வெளியே அவ்வளவாக தகவல்கள் வந்தது இல்லை.இந்த நிலையில் நடிகர் அரவிந்த் சாமி மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் அவர் நன்றாக வளர்ந்து அடுத்த அரவிந்த் சாமி வீட்டின் நாயகன் போல் காணப்படுகிறார்.

Related Posts