மனைவியை பிரிய காரணம் இதுதான் ஓப்பனாக உடைத்து கூறிய ஜெயம்ரவி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் என்றால் அது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து குறித்து தான். முன்னதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர்களின் விவாகரத்து என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. ஏனெனில் 16 கால உறவை முறித்துக்கொள்வது என்பது எப்படி முடியும்? என்றே சோசியல் மீடியாவில் பேசப்பட்டது. இப்போது ஆர்த்தி - ரவி 13 ஆண்டுகால உறவை முறித்து கொண்ட நிகழ்வு மேலும் பேசு பொருளாக மாறியுள்ளது. ஆர்த்தி வீட்டில் ஜெயம்ரவி ஒரு பொம்மை போலவே நடத்தப்பட்டார், தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாத சூழல், தனக்கென்ற விருப்பு வெறுப்பு இல்லாமல் போகவே விவாகரத்து என்ற நிலைக்கு வந்துள்ளார் என சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கபட்டது. 

இந்த விவாகரத்து குறித்து ஆர்த்தி தனக்கு எதுவும் தெரியாது என அறிவித்ததை தொடர்ந்து ஜெயம் ரவி மேல் பல குற்றச்சாட்டுகள் போடப்பட்டது.இந்நிலையில், ஜெயம் ரவி இது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த விவாகரத்து குறித்து எதுவும் தெரியாது என ஆர்த்தி சொல்வது எல்லாம் பொய். இந்த முடிவு எடுத்த பிறகு நான் விவாகரத்து நோட்டீஸ்சை அவர்களுக்கு இரண்டு முறை அனுப்பினேன் அதை பெற்று கொண்டு கையெழுத்து போட்ட பிறகு தான் நான் என் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன். என்னுடைய ஒரு மகன் பிறந்தநாள் அன்று நான் ஹோட்டலில் இவர்களுக்காக காத்துகொண்டு இருந்தேன் ஆனால் அதை தெரிந்து ஆர்த்தி என் குழந்தைகளை கூட்டி கொண்டு இலங்கை சென்று விட்டார். 

திருமணமாகிய நாள் முதல் எனக்கென்று தனியாக வங்கியில் கணக்கு கிடையாது. நான் எந்த செலவு செய்தலும் அதற்கு கணக்கு கேப்பார் ஆனால் ஆர்த்தி தன் இஷ்டம் போல் செலவு செய்வார்.எனக்கு அந்த வீட்டில் எந்த மரியாதையும் இல்லாமல் போனதால் தான் இந்த முடிவு எடுத்தேன் என பேசியுள்ளார்.

Related Posts