பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை போட்ட திரிஷா! சுவரால் வந்த வினை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை த்ரிஷா மீண்டும் முன்னணி ஹீரோயினாக தற்போது கோலிவுட்டில் வலம் வர தொடங்கி இருக்கிறார். விஜய், அஜித் என தொடர்ந்து பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். த்ரிஷாவின் மார்க்கெட் அவ்வளவு தான் என சினிமா வட்டாரம் பேச ஆரம்பிக்கும் நேரத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆன GOAT படத்தின் ஒரு பாடலில் நடனம் ஆடி நல்ல வரவேற்பை பெற்றார். என்னதான் செய்தாலும் நயன்தாராவின் இடத்தை பிடிப்பாரா திரிஷா என்றால் அது சந்தேகமே! சினிமாவில் நயன்தாரா மற்றும் திரிஷாவிற்கு தான் தொழில் ரீதியான போட்டி என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த விஷயத்தில் நயன்தாரா தனக்கு யாரும் நிகரில்லை என சொல்லும் விதமாக லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார். நயன்தாராவுக்கு அடுத்து எந்த ஹீரோயின் வருவார் என யோசித்து பார்த்தால் பெரிய வெற்றிடம் தான் நிலவும். 

திரிஷா நயன்தாராவுக்கு அடுத்தாவது வருவாரா? என்றால் திரிஷாவோ பக்கத்து வீட்டுகாரருடன் சண்டை போட்டு கொண்டிருக்கிறார். ஆம், த்ரிஷா சென்னையில் Cenotaph Roadல் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அங்கு பக்கத்து வீட்டுக்காரர் உடன் ஏற்பட்ட தகராறு பற்றி நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.இரண்டு வீட்டுக்கும் பொதுவான மதில் சுவரை இடித்துவிட்டு பக்கத்து வீட்டு காரர் மாற்றி கட்ட முயற்சிப்பதாக த்ரிஷா வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுவரை இடிக்க இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்நிலையில் இரண்டு தரப்பும் தற்போது பேசி சமரசம் செய்துகொண்டதாக நீதிமன்றத்தில் கூறி இருக்கின்றனர். அதனால் வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது.

Related Posts