எகிறும் தங்க விலை! ஏழை மக்கள் என்ன செய்வார்களோ?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 7100 வரை உயர்ந்துள்ளது. அதன்பிறகு ஒரு சவரன் 320 வரை உயர்ந்து 56 ஆயிரத்து 800 வரை உயர்ந்துள்ளது. இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7555 ஆகவும், ஒரு சவரன் 60,440 ஆகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலையும் ஒரு ரூபாய் ஒரு கிராம் 102 ரூபாய் ஆகவும் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 2000 ரூபாய் ஆகவும் இருக்கிறது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது

Related Posts