என்னதான் நடந்தது? உண்மையை கூறிய ஜெயம் ரவி மனைவி! போதும் சர்ச்சை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோரது விவாகரத்து நாளுக்கு நாள் பல்வேறு ச*ர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா வட்டாரம் முழுக்க இந்த பேச்சு தான். முதலில் ஜெயம் ரவி விவாகரத்து பற்றி அறிவித்த நிலையில் தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது, ஒருதலைப்பட்சமாக எடுத்த முடிவு இது என ஆர்த்தி அறிக்கை வெளியிட்டார். அதன் பின் ஜெயம் ரவியை ஆர்த்தி கொ*டுமைப்படுத்தியதாக சில தினங்கள் முன்பு செய்தி வெளியானது. ஜெயம் ரவிக்கு தனியாக வங்கி கணக்கு கூட இல்லை, அனைத்துக்கும் மனைவி இடம் தான் வாங்க வேண்டும், சின்ன செலவுக்கு கூட மனைவியை எதிர்பார்க்க வேண்டிய நிலை, அனைத்து சொத்தும் இருவரது பெயரில் தான் இருக்கிறது. கார் உட்பட எல்லா சொத்தும் இருவரது பெயரில் தான் இருக்கிறது என ஜெயம் ரவி கூறியதாக தகவல் வெளியானது. 

இந்த செய்தி வெளியானதை அடுத்து சினிமா வட்டாரம் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் ரவி மீது அனுதாபமும் ஆர்த்தி மற்றும் ஆர்த்தி அம்மா மீது கடும் அதிருப்தியும் எழுந்தது. ஆர்த்தியின் அம்மா ஜெயம் ரவியை வைத்து தயாரித்த படங்கள் பெரிய நஷ்டம் என கணக்கு காட்டினார், ஆனால் விசாரித்தால் அவை நஷ்டம் எல்லாம் இல்லை எனவும் தகவல் வந்தது. 

இந்நிலையில் ஆர்த்தி தற்போது ஒரு புது அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் ஆர்த்தி. நான் அமைதியாக இருப்பது என்னுடைய கு*ற்ற உணர்ச்சி அல்லது பலவீனத்தால் அல்ல. உண்மையை மறைத்து, என்னை தவறாக சித்தரித்து காட்ட சிலர் செய்யும் முயற்சிகளுக்கு பதில் அளிக்காமல் இருந்தேன். விவாகரத்து அறிவிப்பு இருவரது ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது என சொல்வது பொய்.இதுபற்றி தனியாக பேச நான் தற்போதும் தயாராக இருக்கிறேன். தற்போது வரை அது மறுக்கப்பட்டு வருகிறது. யாருடைய புகழையும் கெடுக்கும் வகையில் பொதுவெளியில் நான் பேச மாட்டேன். குடும்பத்தின் நலன் மீது தான் என்னுடைய ஒரே கவனம் இருக்கிறது என கூறியுள்ளார் ஆர்த்தி.

Related Posts