சூர்யா கணவராக வேண்டும் - ஆசையை ஓப்பனாக கூறிய பிரபலம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் ஹிட் பாடகியாக வலம் வந்தவர் தான் சுசித்ரா. இவர் சுசி லீக்ஸ் என்ற ட்விட்டர் பக்கம் மூலமாக மிகவும் பிரபலமானார். அவர் தான் சிறந்த பாடகியாக வலம் வந்து கொண்டிருந்தபோது பல ச*ர்ச்சைகளுக்கு ஆளானார். பிறகு, சிறிது காலம் அமைதியாக இருந்த சுசித்ரா மீண்டும் பேட்டிகளில் கலந்து கொண்டு பல நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி வருகிறார்.அவர் கூறும் பல ச*ர்ச்சைகளுக்கு சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளிடம் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பாது. ஏனெனில் பெரும்பாலும் இவர் கூறுபவைகளுக்கு ஆதாரம் வைத்து கொண்டே பேசுவார் என்பதால் சம்மந்தப்பட்ட பிரபலங்கள் வாயே திறக்காமல் இருப்பதுண்டு.

இவர் அடிக்கடி பேட்டியில் ஏதாவது ஒரு பிரபலம் பற்றிய ரகசிய தகவல்களை வெளியிடுவார். அந்த வகையில், தற்போது பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா குறித்து பேசியுள்ளார். அதில், அடுத்த ஜென்மத்திலாவது நடிகர் சூர்யா எனக்கு கணவராக வர வேண்டும் என்று நினைத்தேன். நானும் அவரும் இணைந்து ஆயுத எழுத்து என்ற படத்தில் நடித்தோம்.அவர் ஒரு சிறந்த மனிதர், அந்த படத்தில் சூர்யா நடித்து கொண்டிருந்தபோது நான் அவரை ரசித்து கொண்டிருப்பேன் அந்த அளவிற்கு எனக்கு சூர்யாவை பிடித்தது. அவர் நடித்த அந்த சீன் முழுவதும் நான் அவர் கண்ணை பார்த்து கொண்டிருந்தேன். இதை பார்த்து அந்த படத்தின் இயக்குனரான மணிரத்னம் என்னை திட்டிக்கொண்டே இருந்தார் என கூறியுள்ளார்.

Related Posts