பீருக்காக குழந்தையை விற்க முயன்ற அமெரிக்க தம்பதி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவின் வடமேற்கு அர்கான்சாஸ் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் டெரைன் அர்பன் (21) மற்றும் ஷலினி எக்லர்ஸ் (20). இவர்கள் 1,000 டாலர் பணம்  மற்றும் பீருக்காக பெற்றகுழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் தங்களது குழந்தையை பணத்துக்காகவும், பீருக்காகவும் விற்க முயல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, டெரைன்-ஷலினி தம்பதி தங்களது குழந்தையை விற்க ஒப்பந்தம் மேற்கொண்டு இருவரும் கையெழுத்திட்டது தெரியவந்தது. 

இதையடுத்து, அந்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர். மைனர் குழந்தையை சட்டவிரோதமாக விற்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அந்த தம்பதி மீதுவழக்குப் பதிவு செய்த போலீஸார்அவர்களை சிறையில் அடைத்தனர். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர்கள் அக்டோபர் 29-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

Related Posts